தீனா படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும், முருகதாஸூம் இணையவுள்ளனர். இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜித்தை வைத்து தீனா என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.
டைரக்டராக அறிமுகமான முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட். தீனா படத்தால் அஜித்துக்கும், ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் பெரிய பெயர் கிடைத்தது. மேலும் அஜித்துக்கு தல என்ற பெயரே இந்த படத்தால் தான் கிடைத்தது.
இந்நிலையில் கிட்டத்தட்ட 11 வருடத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும், முருகதாஸூம் இணைந்து படம் பண்ண இருக்கின்றனர்.
அதுவும் இந்தபடத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமாம். ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன ஒன்-லைன் ஸ்டோரி, அஜித்துக்கு ரொம்ப பிடித்து போக உடனே ஒப்புக்கொண்டுவிட்டாராம்.
ஏற்கனவே அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி, வில்லன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டாகின. அந்த சென்டிமென்ட்டாக இந்தபடத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
தற்போது விஷ்ணுவர்தன் படத்தில் நடித்து வரும் அஜித், அதற்கு அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதற்கு அடுத்து இந்தப்படத்தில் நடிப்பார் என தெரிகிறது. விரைவில் இதுப்பற்றிய முழுஅறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் இரட்டை வேடத்தில் அஜித்!
Written By admin on Tuesday, January 22, 2013 | 9:45 AM
Labels:
news

Post a Comment